Sunday 5 July 2015

கோவில் நகரம்

மதுரையை கோவில் நகரம் என்று சொல்வார்கள். காரணம் மதுரையில் ஒவ்வொரு தெருவிலும் எதாவது ஒரு சின்னஞ்சிறு கோவில் இருக்கும்.
ஆனால் இவை பக்தியின் காரணமாக உருவாக்கப்பட்டவை என்று தவறாக நினைத்துவிட கூடாது.
பொதுமக்கள் பலரும் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உருவாக்கப்பட்ட கோவில்களே அதிகம்.
நான் வசிக்கும் பகுதியில் நான் வழக்கமாக(நான் மட்டும் அல்ல. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும்) குப்பையை சென்று போடும் இடத்தில் இன்று செங்கல்லை அடுக்கி அதன் மேல் பிள்ளையாரை உக்கார வச்சிருக்கானுங்க.
பிள்ளையாருக்கு சற்று தள்ளி குப்பையை போட்டு விட்டு வந்துவிட்டேன்.
எனக்கு இப்போ என்ன சந்தேகம் என்றால் இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்களும் இப்படி தான் உருவாக்கி இருப்பார்களோ என்று.

No comments:

Post a Comment